இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீனுக்கு தெரியாதே! மீள முடியாது என்பது!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மீனுக்கு தெரியாதே! மீள முடியாது என்பது!
Permalink  
 


கையில் கிடைத்ததும்  கத்தியால் கிழித்து கருகும்  தீயில்போட கையில் கத்தியுடன் கரையில் ஒருவன் காத்திருக்கிறான் என்பது கண் முன்னே தொங்கும் புழுவை கடித்து சாப்பிடும் மீனுக்கு நீரில் இருக்கும்வரை தெரியவே தெரியாதே! 

 
அதை அறிந்தவர்  சொன்னாலும் அதற்க்கு  புரியவே புரியதே!  
 
மாட்டிக்கொண்டு வெளியில் வந்து அறிந்தவர் சொன்னது அத்தனையும் உண்மைதான் என அறிய வரும்போதோ, அதற்க்கு தப்பித்து போக  தயவு காலங்கள் கொடுக்கப்பட மாடடாது.  
 
எனவே அறிந்ததை சொல்லவேண்டியது  அடியார்கள் மேல் விழுந்த கடமையாகிறது! எங்களுக்கு அறிவிக்கப்படத்தை திரும்ப திரும்ப சொல்கிறோம்.
 
உங்களை பாதாளத்தில் தள்ளி பகல் இரவு வாதிப்பதற்க்காக சத்துரு எடுக்கும்  சகல முயற்சிகளும் இதோ!
 
காசேதான் கடவுள் என்பான் ஆசை படத்தை எல்லாம் அனுபவி என்பான். 
பையில் இருப்பதை கொடுக்காதே என்பான் கையில் கிடைத்ததை சுருட்டு என்பான். 
 
லஞ்சம் கிடைத்தால் விடாதே என்பான் வஞ்சம் வைத்து பழிதீர் என்பான். 
நெஞ்சில் ஈரம் வேண்டாம் என்பான், கொஞ்சநாள் வாழ்வே  அனுபவி என்பான் 
 
உலகத்தோடு ஒத்துப்போ என்பான் உண்மையை  பேசினால் உதவாது என்பான். 
அனுபவிராஜா அனுபவி என்பான் அனுபவித்த பின்னோ அதுவே  பாவம் என்பான். 
 
காதல்  ஒன்றே பிரதானம் என்பான் கண்களின் இச்சையை அனுபவி என்பான்.       
அடுத்தவன் மனைவியே அழகானவள் என்பான் கொண்டவளை பற்றியோ குறைகளையே காட்டுவான். 
 
கூத்தாடி பின்னே கொடிபிடி என்பான் அடிதடி வந்தால் விடாதே என்பான். 
ஆபாசத்தை காட்டி அமிழ்த்த பார்ப்பான் நாசமாய் போக நாலும் செய்வான்.
 
போதையை ஏற்றினால் சொர்க்கம் என்பான் பாதை மாற்றியே பள்ளத்தில் அமிழ்ப்பான். 
நண்பனாய் வந்து நசுக்க பார்ப்பான் எதிரியாய் வந்து ஏமாற்ற பார்ப்பான். 
 
இரக்கப்படடால் இழந்து போவாய் என்பான் பொறுத்தது போதும் பொங்கி ஏழு என்பான். 
நயவஞ்சகம் பண்ணி நடிக்க சொல்வான்.பக்கத்து வீடடை பகைக்க சொல்வான்  
 
கர்த்தரின் கடடளை  கடினம் என்பான் கைக்கொண்டு நடப்பது சிரமம் என்பான்.   
நேர்மையாய் வாழ்ந்தால் அது போதும் என்பான் அப்படி வாழவும்  விடவே  மாடடான்.  
 
கடவுள் எல்லோரையும் மன்னிப்பார் என்பான் இரட்சிப்பின் ரகசியத்தை  இருளில் மறைப்பான். 
தேவனே இல்லை என்றும் சொல்வான்,  சொர்க்கம்  நரகம் கட்டுக்கதை என்பான்  
 
கர்த்தரை நம்புவது விருதா என்பான் இயேசுவின் இரத்தத்தை  இகழ வைப்பான். 
பாவியாய் வாழ்ந்து முடிக்க வைப்பான் பாதாளத்தில் உன்னை வதைக்க வைப்பான்!    
 
தந்திரக்காரனாகிய அவனிடமிருந்து தப்புவது கடினம் எனக்கன்பானவர்களே ஏமாந்து போகாதீர்கள்!
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

wonderful...

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard