இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்வது குறித்து...


நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்வது குறித்து...
Permalink  
 


II தீமோத்தேயு 2:4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.

இந்த வசனத்துக்கு எப்படி பொருள் கொள்ளலாம்? முழு நேரமாய் தேவனுக்கு ஊழியம் செய்ய அர்ப்பணித்தவர்கள் தொழில் செய்ய கூடாது என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஆனால் பவுல் அப்போஸ்தலன் கூட கூடாரம் பின்னும் தொழில் செய்து கொண்டே ஊழியம் செய்தார்.



-- Edited by t dinesh on Saturday 23rd of November 2019 08:27:58 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அன்பான சகோதரனே!

எப்படி சுகம்?

அநேக நாட்களுக்கு பின்னர் வந்துளீர்கள்

தாங்கள் வந்தது அதிக மகிழ்ச்சி..

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
RE: தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்வது குறித்து...
Permalink  
 



///II தீமோத்தேயு 2:4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.///

அன்பான சகோதரருக்கு கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
 
மேலே தாங்கள் குறிப்பிட்டுள்ள வசனத்தில் மிக முக்கியமான வார்த்தை என்று நான் எடுத்துகொள்வது 
"பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்" என்பதே.
 
இங்கு முழுநேர ஊழியம் பற்றி குறிப்பிடுவதாக நான் கருதவில்லை மாறாக தேவன் சொன்னதை உடனடியாக செய்து முடிக்கமுடியாதபடிக்கு  "பிழைப்புக்கடுத்தது அலுவல்களில் நாம் சிக்கிக்கொள்ள கூடாது" என்பதே அதன் நோக்கம்.
 
அதாவது நாம் பிழைப்புக்காக செய்யும் எந்த ஒரு வேலையும் தேவன் நமக்கு சொல்லும் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் ஒரு நிலையில் நாம் இருக்கக்கூடாது. 
 
முழு நேரம் ஊழியம் செய்தால் பிறர் பணத்தின் நாம் சாப்பிட வேண்டியது வரும்:
 
ஆனால் பவுல் தான் வேலை செய்து சாப்பிட்ட்தாகவும் எல்லோரும் வேலை செய்து சாப்பிட வேண்டும் என்றும்  பல இடங்களில் சொல்லியிருக்கிறார். 

I தெசலோனிக்கேயர் 2:9   உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.  
 
I கொரிந்தியர் 4:12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்;  
 
 I தெசலோனிக்கேயர் 4:12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
 
II தெசலோனிக்கேயர் 3:10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.  
 
II தெசலோனிக்கேயர் 3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.  
 
எனவே நான் புரிந்துகொண்டபடி "பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொண்டு பிழைப்பு நடத்துவதும் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதும் முக்கிய  நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது. கர்த்தரின் அழைப்பு வருமாகின் எந்த நேரத்திலும் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதே"


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 136
Date:
Permalink  
 

Debora wrote:

அன்பான சகோதரனே!

எப்படி சுகம்?

அநேக நாட்களுக்கு பின்னர் வந்துளீர்கள்

தாங்கள் வந்தது அதிக மகிழ்ச்சி..


 நன்றி சகோதரி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி?.

உங்கள் பதிவுகளை படிக்கிறேன். நன்றாக உள்ளன.

என்னடைய கணணி பழுதடைந்து விட்டது. அதனால்தான்  பல நாட்களாக எழுத முடியவில்லை இப்போது வேறு ஒரு நல்ல கணணி ஒன்றை கர்த்தர் கொடுத்துள்ளார். 



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
தொழில் செய்து கொண்டு ஊழியம் செய்வது குறித்து...
Permalink  
 


Oh.. God Bless u anna

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard