இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
மரணம் ஜெயிக்க முடியாதது அல்ல!
Permalink  
 


இறைவன் உண்டாக்கி ஏதேன் தோட்டத்தில் வைத்த முதல் மனிதன் பாவம் செய்து தேவனை விட்டு பின்வாங்கி போனான். ஒரு நிலையில் மனிதனின் அக்கிரமம் பொறுக்க முடியாமல், இறைவன் உலகத்தை ஜலத்தின் மூலம் அழித்தார். அழிவில் இருந்து தப்பிய நோவா என்ற நீதிமானின் சந்ததியில் இருந்து வந்த ஆபிரகாமை இறைவன் அழைத்து வழி நடத்தி அவர் சந்ததியில் இயேசு என்னும் இரட்ச்சகரை எழுப்பி எல்லா மனிதனின் மொத்த பாவத்துக்க்காகவும் சிலுவையில் அவரை மரிக்கும்படி செய்தார்.

.

இயேசுவின் மரணத்தின் மூலம் ஒரு மனிதன் எந்த நிலையிலும் (அதாவது மிக கொடூரமான பாவம் செய்திருந்தால் கூட) தேவனுடன் ஒப்புரவாகி பரலோக ராஜ்யம் போக முடியும். . இயேசுவை ஏற்றுக்கொண்ட மனம்திரும்பி இரட்சிக்கப்பட்ட யாவரும் கடந்த காலத்தில், அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் கழுவப்பட்டு இரட்சிப்பு என்னும் ஒரு சந்திப்பை வந்து அடைகின்றனர். அங்கிருந்து வழி இரண்டாக பிரிகிறது.

 

வழி 1. மிக சமீபமாக இருக்கும் பரலோக ராஜ்யம் போகும் வழி:
இங்கு போக வேண்டுமென்றல் மனிதன் தன் மாமிசத்தில் மரித்தே ஆகவேண்டும். இங்கு போவதன் மூலம் போகும் அந்த நபர் ஒருவரே நரக அக்கினியில் இருந்து தப்பிக்க முடியும். மேலும் இங்கு ஒருவர் போவதினால் சாத்தானுக்கோ அவன் ராஜ்யத்துக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் வழி. அதை பற்றி விளக்க அனேக கிறிஸ்தவ அமைப்புகள், ஊழியர்கள் உள்ளனர். .

 

வழி 2. மிக தூரத்தில் இருக்கும் ஏதேன் தோட்டம் போகும் வழி
இது ஜீவ விருட்சம் உள்ள ஏதேன் தோட்டத்துக்கு வந்த பாதையிலே திரும்பி போகும் வழி. இது ஒரு கடினமான நீண்ட வழி. இங்கு ஒரு மனிதன் போய் சேர்ந்துவிட்டால் அவன் மரணமில்லா வாழ்க்கையை அடைவதோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்டுவிட முடியும். அதாவது வேரோடு மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து பாதுகாக்க முடியும். ஏனெனில் எல்லாமே ஒரே மனிதனால் தான் வந்தது அதுபோல் எல்லாமே ஒரே மனிதனால்தான் முடியும். .

இயேசு மனிதனாக வந்தாலும் அவர் மனித வித்தினால் பிறக்கவில்லை அவர் இறைவனின் வித்து அகவே அவர் நமக்கு சரியான பாதையை காட்டி உதவி செய்யத்தான் முடியுமே அன்றி வேறொன்றும் செய்ய முடியாது. "வானத்திலும் பூமியிலும் அவருக்கு சகல அதிகாரமும் உள்ளது" அவரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பாவத்தில் மரித்து நரகத்துக்கு போகும் மனிதனை தடுத்து நிறுத்த அவரால் முடியாது..

 

மேலும் இறைவனும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டார். தன் சொந்த குமாரனையே நமக்காக கொடுத்துவிட்டார் அவரும் தன் கடைசி சொட்டு இரத்தம் வரை நமக்காக சிந்தி விட்டார். இனி நாம் தான் ஆதாமின் இடம் வரை போய் மனித வர்க்கத்தை மீட்க வேண்டும். சிலுவையில் இயேசு எல்லாம் முடிந்தது என்று சொன்னதன் காரணம் தேவன் தனது பக்கம் இருந்து செய்ய வேண்டிய எல்லாம் முடிந்துவிட்டது என்பதைத்தான் சொல்கிறதே அல்லாமல் இன்றைய கிறிஸ்தவர்கள் சொல்வதுபோல் நாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் அவர் செய்துவிட்டார் நாம் ஒன்றும் செய்ய வேண்டிய தேவை இல்லை என்பதை குறிப்பதர்க்காக அல்ல. அப்படி அவரால் நமக்கும் சேர்த்து எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியுமானால் இவ்வளவு பெரிய பைபிள் எதற்கு திரும்ப திரும்ப என் வார்த்தையை கை கொள்ளுங்கள் என்று ஏன் அவர் நம்மை பார்த்து சொல்லவேண்டும். இயேசுவின் மேல் உள்ள விசுவாசம் மட்டும் போதுமென்றால் வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தில் ஒவ்வொரு சபைக்கும் ஆவியானவர் எழுதும் போது "உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன் " என்ற வார்த்தையை மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறாரே அது ஏன்? மேலும் "ஆதியில் கொண்ட அன்பை விடுவது குற்றம்" என்றும் "ஜீவ புஸ்தகத்தில் எழுதிய பெயரை கூட கிருக்க்கிபோட முடியும்" என்று அங்கு சொல்லப்படடிருக்கிறதே! அன்பானவர்களே கிரியை இல்லாத விசுவாசம் செத்தது அதனால் எந்த பயனும் இல்லை.

 

நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியுமா?

 

"நாம் செய்த தவறுக்கு வேண்டுமானால் இன்னொருவர் தண்டனை அனுபவிக்க முடியும் அனால் நமது பசிக்கு இன்னொருவர் சாப்பிட முடியாது" அதுபோல எல்லோருடைய பாவங்களுக்கும் சேர்த்து இயேசு இரத்தம் சிந்திவிட்டார். அவர் இரத்தமேயன்றி நமக்கு பாவமன்னிப்பு இல்லை ஆனால் அதை பயன்படுத்தி பரலோகம் பொய் சேர்வது எப்படி நமது விசுவாசத்தில் உள்ளதோ அதுபோல மொத்த மனித கூட்டத்தையும் நரக அக்கினியில் இருந்து மீட்பது நமது கிரியையில் தான் உள்ளது இது ஏன் அனேகருக்கு புரிவதில்லை என்று தெரியவில்லை. ஆகவேதான் அவர் கிரியைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

 

இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு கற்பனைகளும்.

 

மேற்சொன்ன இரண்டு வழிகளும் இயேசுவின் இரண்டு பிரதான கற்பனைகளாக உள்ளது அவைகள்:

  • உன் தேவனாகிய கர்த்தர் மீது முழு இருதயத்தொடும் முழு ஆத்துமாவோடும் அன்பு செலுத்துவாயாக

  • உன்னிடத்தில் நீ அன்பு கூறுவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூறுவாயாக . இந்த இரண்டு கற்பனையையும் சுருக்கமாக சொன்னால்:

முழு கீழ்படிதல் - கர்த்தரிடத்தில் அன்பாக இருப்பது (அன்பாக இருப்பவன் அவர் கட்டளைகளை கைகொள்வான்) உதாரணம் - ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சென்றது) முழு இரக்கம் எனப்படும் மனதுருக்கம் - தன்னை போல பிறரை நேசிப்பது. உதாரணம் - இயேசு ஒருவரே

 

இதில் வேதபாரகரும் பரிசேயரும் வேதவார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்தார்கள் ஆனால் இரக்கத்தை விட்டுவிட்டார்கள். இன்றைய அனேக கிறிஸ்தவர்களிடம் முழுமையான இரக்கப்படுதலும் இல்லை முழுமையான கீழ்படித்தலும் இல்லை.

 

மேற்சொன்ன இரண்டு வழியில் எதில் நடக்க வேண்டுமென்றாலும் அது மனிதனின் சொந்த பலத்தினால் முடியாத ஒரு செயல். அகவேதான் பரிசுத்த ஆவி என்னும் ஒரு கூடுதல் பெலனை இயேசுவின் மரணம் மூலம் இறைவன் நமக்கு அருளியுள்ளார். அந்த ஆவியின் துணையுடன் விசுவாசத்தில் முழு பிரதிஷ்ட்டையோடு நடந்தால் கண்டிப்பாக மரணத்தை ஜெயிக்க முடியும் இந்த வழியை பற்றித்தான் நான் விளக்கம் கொடுக்க போகிறேன்.

 

ஜீவ விருட்ச்த்துக்கான பாதை:

 

நாம் இப்பொழுது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசி புத்தகத்துக்கு வருவோம். இது 48 அதிகாரம் உள்ள பெரிய புத்தகம். இதில் உள்ள எல்லா வார்த்தைகளுமே கர்த்தரால் நேரடியாக மனிதனுக்கு சொல்லப்பட்டது அல்லது வெளிப்படுத்தப்பட்டது. அதில் 18ஆம் அதிகாரத்தில் 5ஆம் வசனத்திலிருந்து நாம் இப்பொழுது பார்க்கலாம். அங்குதான் ஜீவ விருட்ச்த்துக்கான பாதை இருக்கிறது அதாவது சாகவே சாவாய் என்ற சாபத்தின் எதிர் சொல்லாகிய பிழைக்கவே பிழைப்பாய் என்ற ஜீவன் உள்ளது.

 

எசே 18 : 5. ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,

6. மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும்,

7. ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து,

  1. 8. வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து,
    1. 9. என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று 

கர்த்தராகிய

  1.  ஆண்டவர் சொல்லுகிறார்.

 

 

யார் பிழைக்கவே பிழைப்பார்? - நீதிமான் பிழைக்கவே பிழைப்பான் .

 

யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.

 

  1. ஒருவன் நீதிமானாயிருந்து

  2. நியாயத்தையும் நீதியையும் செய்து

  3. மலைகளின் மேல் சாப்பிடாமலும்

  4. இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை எறேடுக்காமலும்

  5. தன் அயலானுடைய மனைவியை தீட்டுபடுத்தாமலும்

  6. தூரஸ்திரியோடே சேராமலும்

  7. ஒருவனையும் ஒடுக்காமலும்

  8. கொள்ளையிடாமலும் இருந்து

  9. கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து

  10. தன் அப்பத்தை பசித்தவனுக்கு பங்கிட்டு

  11. வஸ்த்திரம் இல்லாதவனுக்கு வஸ்த்திரம் தரிப்பித்து

  12. வட்டிக்கு கொடாமலும்

  13. பொலிசை வாங்காமலும்

  14. அநியாயத்துக்கு தன் கைகளை விலக்கி

  15. மனிதனுக்குள்ள வழக்கை உண்மையாய் தீர்த்து

  16. என் கட்டளைகளின் படி நடந்து

  17. என் நியாயங்களை கை கொண்டு

  18. உண்மையாயிருப்பனாகில்

அவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.

 

"சாகவே சாவாய்" என்ற தேவனின் சாபத்துக்கு விமோச்சனம் அல்லது முடிவு  "பிழைக்கவே பிழைப்பான்" என்ற வார்த்தையினுள்  இருக்கிறது  





-- Edited by SUNDAR on Friday 28th of February 2020 03:26:08 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

அட்புதமான கட்டுரை .. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

மரணமில்லாமலும் வாழ முடியும் அதட்கான வழிகள் இருக்கிறது என்று இப்போதான் தெரிகிறது.. அநேக காரியங்களை கற்றுக்கொள்ள அறிந்துகொள்ள இத்தளம் உதவியாயிருக்கிறது..

தொடர்ந்து எழுந்துங்கள் அண்ணா

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

1. ஒருவன் நீதிமானாய் இருந்து:

 

ஒருவன் நீதிமானாயிருந்து  நியாயத்தையும்  நீதியையும் செய்து  எசேக்கியேல்  18:5 

 

யார் நீதிமான் என்று வசனம் சொல்லும்போது, ஒருவன் பிழைக்கத்தக்க நீதிமானாக ஆகவேண்டும் என்றால் "அவன் நீதிமானாக இருக்கவேண்டும்" என்று வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதன் பொருள் எனக்கு நீண்ட நாளாக புரியவில்லை. ஒருநாள் இறைவன் அதை எனக்கு வெளிப்படுத்தினார். 

 

அதாவது ஒருவன் நீதிமானாக ஆக வேண்டுமென்றால் அவன் முதன்முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாக வேண்டும். 

 

இதை தான் எசாயா தீர்க்கன் மூலம் ஆண்டவர் 53:11ல் "என் தாசனாகிய நீதிபரர் தன்னை பற்றும் அறிவினால் அநேகரை நீதிமானாக்குவார்" என கூறுகிறார். . 

 

இதை நாம் சற்று விளக்கமாக பார்ப்பது நல்லது என நினைக்கிறேன். ஏனெனில் இது சம்பந்தமாக பல தவறான உபதேசம் அநேகரை துணிந்து பாவம் செய்யவைக்கிறது. இயேசு என்னை நீதிமானாக்கிவிட்டார் இனி பாவம் என்னை ஒன்றும் செய்யாது என்று பலர் கர்த்தரின் கட்டளைகளை துணிகரமாக மீறி பாவம் செய்து தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 

 

நீங்கள் எந்த காலத்தில் இருந்தாலும் எவ்வளவு பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டாலும் பாவம் செய்தால் கண்டிப்பாக தண்டனை உண்டு. மனிதன் எதை விதைக்கிரானோ அதன் பலனை அறுத்தே தீருவான் ஏனென்றால் இந்த பூமியின் தன்மை அதுதான். பூமியில் விதை விதைத்தால் சில விதைகள் ஓரிரண்டு வாரங்களில் பலன் தரும், சில விதைகள் ஓரிரண்டு மதங்களில் பலன் தரும் சில விதைகள் சில வருடங்கள் கழித்தும், சில விதைகள் (பனை போன்றவை) சில தலைமுறைகள் கழித்தும் பலன் தரும். கோதுமையை விதைத்து நெல்லை அறுக்க முடியாது அதுபோல் எதை விதைக்கிறோமோ அது வட்டியும் முதலுமாக திரும்ப கிடைத்தே ஆகும். நன்மையை விதைத்தால் நன்மையும் தீமையை விதைத்தால் தீமையும் கண்டிப்பாக கிடைக்கும்.

.

அகவேதான் எரேமியா தீர்க்கன்: தன் பாவத்துக்கு வரும் தண்டனை குறித்து முறையிடுகிரதென்ன? நம் வழிகளை சோதித்து பார்த்து கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம் என்று புலம்பல் புஸ்தகத்தில் புலம்புகிறான்

 

தவறு இல்லாமல் தண்டனை இல்லை: தவறு செய்யாத பிள்ளையை எந்த ஒரு நல்ல புத்தியுள்ள தகப்பனும் தண்டிப்பது இல்லை அல்லது பிறன் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பது இல்லை. இந்த உலக தகப்பனே இப்படி இருக்கும்போது, மகா நீதியுள்ள நமது பரமதகப்பன் யாரையும் தவறு இல்லாமல் தண்டிப்பதும் இல்லை சாத்தான் கையில் தண்டனைக்கு ஒப்பு கொடுப்பதும் இல்லை.

.

ஊழியர்களை பிசாசு கடினமாக தாக்குவான் என்பதெல்லாம் ஒரு தவறான உபதேசம். தான் உழைத்து சாப்பிடும் ஒரு விசுவாசியை விட, பிறரின் காணிக்கையில் வாழ்க்கை நடத்தும் ஊழியர்கள் செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்கும் இறைவனிடம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். அதில் இறைவன் மிகவும் கண்டிப்பான தகப்பன் போல இருக்கிறார் அதில் ஊழியர்கள் தவறு செய்யும் போது இறைவனின் தண்டணையை பெற நேரிடுகிறதே அன்றி வேறொன்றும் இல்லை. ஆண்டவரின் அனுமதி இன்றி யாரும் நம் மேல் கை வைக்க முடியாது. அதுபோல் நம் மேல் குற்றம் இல்லாமல் இறைவன் யாரையும் நம்மை தொட அனுமதிப்பது இல்லை 

 

ஆனால் இன்றைய பாஸ்டர்கள் எதாவது நோய் நொடி விபத்து வந்து விட்டால் தான் செய்த பாவம் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து திருத்திக்கொள்ளாமல், சாத்தான் தாக்குகிறான் என சாத்தான் மேல் பழியை போட்டு தனது பாவத்தை மறைத்து விடுகின்றனர். அதைப்பற்றி நான் அதிகம் எழுத விரும்பவில்லை கர்த்தருக்கு சித்தமானால் அதை பற்றி தனி கட்டுரையில் எழுதுகிறேன். இப்பொழுது நமது மெயின் பாயண்டை பார்ப்போம்

.

இயேசு நியாயபிரமாணத்தின் எந்த பகுதியை முடித்தார்.

.

இயேசு நியாயபிரமாணத்தின் முதல் இரண்டு பகுதியாகிய கர்த்தரின் கட்டளைகளையோ கர்த்தரின் நீதி நியாயங்களையோ மாற்ற அல்லது முடிக்க வரவில்லை என முன்பே வசன ஆதாரங்களுடன் சொல்லி இருந்தேன். 

 

இப்பொழுது இயேசுவின் சிலுவை மரணத்தால் நியாயபிரமாணத்தின் அடுத்த இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம் அமைப்பது, பாவத்துக்கான பலியிடுதல் அதாவது இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகள் எப்படி முடிவடைகிறது என்பதை வசன அதாரத்தோடு பார்க்கலாம். .

.

தேவன் சீனாய் மலையில் தமது வாசஸ்தலம் அமைக்கும் முறை பற்றி விளக்கமாக தெரிவித்தார். மோசேயும் அதே மாதிரியில் வாசஸ்தலத்தை அமைத்து, அவர் கட்டளை இட்டபடியே ஒரு வெளி பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்னும் மூன்று பாகங்களால் ஆன வாசஸ்தலத்தை நிறுவிய போது கர்த்தரின் மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று என்று யாத்ராகமம் 48:35ல் வாசிக்கிறோம். .

 

அதேபோல் கர்த்தர் நிலையாக தங்கும் ஒரு ஆலயத்தை எப்படியாவது கட்டவேண்டும் என்ற தீராத வாஞ்சை தாவீது ராஜாவுக்கு இருந்தது. ஆகவே கர்த்தர் அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக அவரின் குமாரன் சாலமோன் மூலம் தனக்கு ஒரு ஆலயம் கட்டப்படும் என்று அறிவித்தார். அதன்படி ராஜாவாகிய சாலமோன் கர்த்தருடைய ஆலயத்தை கட்டி முடித்தபோது கர்த்தருடைய மகிமையாகிய மேகம் அந்த ஆலயத்தை நிரப்பிற்று என்று I இராஜாக்கள் புத்தகம் 8:10,11ல் பார்க்கலாம்.

 

சாலமோன் செய்த விண்ணப்பத்தை கேட்ட கர்த்தர் சாலமோனுக்கு இரண்டாம் விசை தரிசனமாகி "என் கண்களும் என் இருத்தயமும் எந்நாளும் அங்கே இருக்கும் (Iஇராஜா:9:3) என்று சொன்னாலும். அவர் சொன்ன கட்டளைகளையும், நியாயங்களையும் கை கொள்ளாவிட்டால் "இந்த ஆலயத்தை என் சமூகத்தை விட்டு தள்ளுவேன்" என்று தொடர்ந்து வரும் வசனங்களில் கூறியுள்ளார். . மேலும் கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம்,கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி பொய் வார்த்தைகளை நம்பிகொள்ளாதிருங்கள்((எரே:7:4) என்றும் சொல்வதால் அது அவர் நிலையாக தங்கும் இடமல்ல. .

 

நான் உங்கள் நடுவில் உலாவி உங்கள் தேவனாய் இருப்பேன் (லேவி26:12)

 

உன்னதத்தில் வாசம் பண்ணுகிற நமது தேவனாகிய கர்த்தர் (சங்:113:5), 

 

நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன் (ஏசா: 57:15) 

 

மற்றும் எருசலேமில் வாசம் பண்ணும் கர்த்தர், சீயோனில் வாசம் பண்ணும் கர்த்தர், கேரூபின்கள் மத்தியில் வாசம் பண்ணும் கர்த்தர் என்று தான் வாசம் பண்ணும் இடங்களை பற்றி பல்வேறு விதமாக சொல்லும் கர்த்தர் "வானம் எனது சிங்காசனம் பூமி எனது பாதப்படி" என்று ஏசாயா தீர்க்கன் முலம் சொல்வதால் மனிதன் கைவேலையாய் செய்யும் எதிலும் வாசம் செய்வது இல்லை (அப்:17:24).

 

இதிலிருந்து நாம் பழைய உடன்படிக்கை காலத்தில் கர்த்தர் தன்னை தொழுவதற்கு ஆசரிப்பு கூடாரம் மற்றும் ஆலயம் அமைக்க சொல்லியிருந்தாலும், அவர் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்க வல்லவர் என்றும், அது போல் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பார்க்க வல்லவர் அறிந்து கொள்ளலாம். 

 

ஆகவேதான் யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ள கூடுமோ" என்று எரே:23:24ல் கூறுகிறார். .

 

நாம் புதிய உடன்படிக்கையின் காலத்துக்கு வரும்போது இயேசு கிறிஸ்து "பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும், அது இப்பொழுது வந்திருக்கிறது" என்று சொல்கிறார்.

 

அது எப்படி வந்தது இயேசு சிலுவையில் மரித்தபோது என்ன நடந்தது: . 

 

தேவாலயத்தின் திறைசீலை நடுவில் இரண்டாக கிழிந்தது (லுக்:23:45) 

 

இதே வசனத்தை மத்:28:51, மாற்கு:15:38 லும் பார்க்கலாம். அந்த திரை சீலை தான் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் தடுப்பு ஆகும். கர்த்தரின் கட்டளைபடி பிரதான ஆசாரியன் மட்டுமே வருடத்துக்கு ஒரு முறை அந்த திரையை கடந்து மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் போய் எல்லோருக்குமாக பாவநிவர்த்தி செய்து வருவான். அவனும் எதாவது தவறு செய்திருந்தால் அங்கேயே மரணம் நிச்சயம் பிறகு கயிறை கட்டித்தான் இழுக்க வேண்டி வரும். .

 

இப்படி யாருமே பிரவேசிக்க முடியாமல் இருந்த அந்த மகா பரிசுத்த ஸ்தலம் இயேசுவின் மரணத்தின் மூலம் திறக்கப்பட்டு யார் வேண்டுமானாலும் உள்ளே செல்லும் வழி பிறந்தது . இவ்வளவு கட்டுப்பாடோடும், பரிசுத்ததோடும் காக்கப்பட்ட அந்த ஸ்தலத்துக்குள் என்ன இருந்தது தெரியுமா?

 

மோசே ஒரேபியிலே அந்த பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் அதில் இல்லை (Iஇராஜா:8:9)

 

ஆம் அன்பானவர்களே! இறைவனின் கட்டளைகள் அதுவும் அவர் கைப்பட எழுதிகொடுத்த வார்த்தைகள் அவ்வளவு பரிசுத்தமும் என்றும் மாறாததுமாகும். அதுதான் இறைவன் மீண்டும் மீண்டும் அதாவது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகமாகிய மல்கியா கடைசி அதிகாரமாகட்டும், வெளிபடுத்தின விசேஷம் கடைசி அதிகாரமாகட்டும் . என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாய பிரமாணமாகிய 

 
கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள் (மல்:4:4) 
ஜீவ விருட்சத்தின் மேல் அதிகாரம் உள்ளவர்களாவதர்க்கும் வாசல் வழி நகரத்துக்குள் பிரவேசிப்பதர்க்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்பவர்கள்தான் பாக்யவாங்கள் (வெளி: 22:14) 
 
என்று திரும்ப திரும்ப சொல்கிறார்.

 

.

நான் நிச்சயித்து சொல்லும் ஒரு காரியம் என்னவென்றால் உலகில் உள்ள ஒவொருவரும் இந்த 10 கட்டளைகளின் எதாவது ஒரு கட்டளையால் பிடிக்கப்பட்டிருப்போம் உங்கள் வாழ்க்கையை சற்று சோதித்து பாருங்களேன்.

 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

பலியிடுதல் இரத்தம் சிந்துதல்:

 

 

(பலி என்பது எப்படி முதன் முதலில் இந்த பூமிக்குள் நுழைந்தது என்பதை  "பலி" https://lord.activeboard.com/t35601698/burnt/ என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன் ) 

 

நமது வேதத்தில் பலி என்பது ஆதம் பாவம் செய்த பிறகு ஆரம்பமாகி உள்ளது. சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு தேவனின் கட்டளையை மீறி கனியை சாப்பிட்ட ஆதமை, சாத்தான், தேவன் அவனுக்கு அணிவித்திருந்த மகிமையின் ஆடையை உரிந்து நிர்வாணியாக விட்டுச்சென்றான். அந்த நிர்வாணத்தை மறைக்க அவன் உடுத்திய அத்தியிலைகளானது அவனது நிர்வாணத்தை முழுமையாக மறைக்க முடியவில்லை எனவே "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவி ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார்" (அதி 3:21) என வேதம் சொல்கிறது.  தோல் வேண்டுமென்றல் ஒரு உயிர் கொல்லப்பட வேண்டும். அகவே அங்குதான் முதல் பலி உண்டானது. 

 

ஆதாமின் பாவத்துக்காக ஒரு பாவமறியா ஜீவன் அங்கு கொல்லப்பட்டது. மேலும் இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை என்ற இறைவனின் நியமணத்துக்கு இணங்க எந்தெந்த பாவங்களுக்கு என்னென்ன பலிகளை செலுத்தவேண்டும் என்று போஜனபலி, பானபலி, சமாதான பலி, பாவ நிவாரணபலி, குற்றநிவாரண பலி, சர்வாங்க தகனபலி என்று பல்வேறு பலிகளை கர்த்தர் லேவியராகம புத்தகம் 1ம் அதிகாரத்தில் இருந்து சொல்லியிருந்தாலும், பலியிடுதல் என்பது தேவனின் மன விருப்பத்துக்கு ஏற்றதல்ல என்றும், எதோ ஒரு நிர்பந்தத்தால்தான் அதை செய்ய கட்டளை இட்டார் என்பதையும் தனது பல்வேறு தீர்க்கதரிசிகள் முலம் கர்த்தர் பேசிய கீழ்காணும் வசனங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

.

பலியை அல்ல இரக்கத்தையே விரும்பிகிறேன், தகன பலிகளை காட்டிலும் தேவனை அறிகிர அறிவையும் விரும்புகிறேன் (ஓசி:6)

 

உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார் (ஏசா:1:11)

 

நான் உங்கள் பிதாக்களை எகிப்த்து தேசத்தில் இருந்து அழைத்துவந்த நாளிலே தகன பலிகளை குறித்தும் மாற்ற பலிகளை குறித்தும் நான் பேசியதையும் கட்டளை இட்டதையும் பார்க்கிலும் என் வார்த்தைக்கு செவிகொடுங்கள் அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன்(எரே:7:22)

 

கர்த்தர் சத்தத்துக்கு கீழ்படிதலை பார்க்கிலும் சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்கு பிரியமாயிருக்குமோ? பலியை பார்க்கிலும் கீழ்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தை பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம் (I சாமு:15:22)

.

எனவே இயேசுவானவர் மனிதனின் எல்லா பாவத்துக்கும் ஒரே தரமாக தனது இரத்தத்தை சிந்தும்வரையுள்ள இடைப்பட்ட காலக்கட்டத்தில் பவ நிவர்த்தி செய்வதற்காக இறைவனால் கட்டளையிடப்பட்டதே இந்த பலிகளும் இரத்தம் சிந்துதல் சம்பத்தப்பட்டவைகளும். ஆட்டுக்கடாக்க்களின் இரத்தத்தை பார்க்கிலும் வல்லமை உள்ள இயேசுவின் இரத்தம் மூலம் பலிகளும், தனது மாமிசத்தை நொறுக்கக்கொடுத்ததின் மூலம் மாமிசம் சம்பந்தப்பட்ட தீட்டுப்படுதல், விருத்தசேதனம் பண்ணுதல் போன்ற சடங்குகளும் ஒரு முடிவுக்கு வந்தது.

.

அகவே நியாயபிரமாணத்தில் இரண்டு பகுதியான கர்த்தரின் வாசஸ்தலம், மற்றும் பலியிடுதல் என்ற இரண்டு சடங்காச்சார்ய காரியங்கள் மட்டுமே இயேசுவின் மரணம் மூலம் முடிவடைந்தது என்பதை இயேசுவின் வார்த்தை மற்றும் தீர்க்க்கதரிசிகளின் வார்த்தைகள் மூலமே நாம் பார்த்துவிட்டோம். ஆனால் ஆண்டவரோ  இயேசு கிறிஸ்துவோ எந்த இடத்திலும் எனது கட்டளைகளையும், நியாயங்களையும் கைகொள்ள வேண்டிய தேவை இல்லை என்று கூறவே இல்லை. அப்படி எங்கும் வேதத்தில் இருந்தால் தயவு செய்து எனக்கு தெரிவியுங்கள்.

.

நாம் இந்த பூமியில் பிறந்ததே பாவம்:

 

 

இரண்டாவதாக நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறக்கும்போதே பாவத்தில்தான் பிறக்கிறோம் "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" என்று சங்கீதம் சொல்கிறது. எப்படியெனில் புசிக்க கூடாது என்று இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான். அதாவது பிறக்க தகுதியில்லாத நாம் பாவத்தின் காரணமாக பூமியில் பிறந்து விட்டோம். அந்த பிறந்த பாவத்தை மன்னிக்க ஒருவர் இறந்தே ஆகவேண்டும் அது இயேசுவின் மூலம் நிறைவேறியது. .

.

எனவே ஒருவன் நீதிமானாக வேண்டுமென்றால் முதல் முதலில் இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு தான் பூமியில் பிறந்த பாவம் மற்றும் பிறந்ததில் இருந்து அந்த நாள் வரை செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்படு நீதிமானாக வேண்டும். அதன் பிறகுதான் இரண்டாவது ஸ்டெப் போக முடியும்.

.



-- Edited by SUNDAR on Thursday 5th of March 2020 08:32:24 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

2. நியாயமும் நீதியும் செய்து:

  

ஒருவன் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமானாய் இருந்தால் மட்டும் போதாது அவன் நியாயமும் நீதியும் செய்ய வேண்டும்.

.

அன்பானவர்களே, நியாயம், நீதி இவை இரண்டும் இரட்டை குழந்தைகளை போன்றது. இந்த வார்த்தைகள் இல்லாத புத்தகமே வேதத்தில் இல்லை எனலாம். அவ்வளவு முறை இறைவன் நீதி நியாயத்தை பற்றி சொல்லிவிட்டார். அதாவது ஏறக்குறைய 200க்கும் மேல்பட்ட இடங்களில் நீதி நியாயம் சம்பந்தமான வார்த்தைகள் வேதத்தில் உள்ளது.

.

அவற்றில் பழைய உடன்படிக்கையில் இரண்டும், புதிய உடன் படிக்கையில் இரண்டு மட்டும் கீழே உள்ளது:

 

கர்த்தர் சொல்கிறார் நியாயத்தை கை கொண்டு நீதியை செய்யுங்கள் (ஏசா:56:1)

நியாயம் தண்ணீரைபோலவும் நீதி வற்றாத நதியை போலவும் புரண்டுவரக்கடவது (ஆமோ:5:24)

வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத் 5:20)

நியாயம் இன்னதென்று தீர்மானிக்காமல் இருக்கிரதென்ன(லூக்: 12:57)

 

இவ்வளவு முக்கியமான வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். எந்த சபையிலாவது நீதி நியாயம் பற்றி விளக்கும் செய்திகள் கொடுக்கப்படுகிறதா? எனக்கு தெரிந்து ஒரு புத்தகம் கூட இந்த தலைப்பில் இருந்தமாதிரி தெரியவில்லை. இந்த நிலை ஏன்? தேவன் திரும்ப திரும்ப சொல்லும் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நாம் என்னத்தை பேசிக்கொண்டு இருக்கிறோம்?

.

இலவசமாக தேவ நீதி நமக்கு கிடைத்தது உண்மை தான். அதற்காக நான் கிடைத்த நீதியை காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன் எந்நாளும் எங்கு இலவசமாக கிடைக்கிறதோ அதையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பேன் என்பது சரியா? . எதோ மழை வெள்ளம் வந்ததால் அரசாங்கம் ஒரு குடும்பத்தும் 2000/- ரூபாயும் கொஞ்சம் அரிசியும் கொடுத்தால் வாழ்நாளெல்லாம் அப்படி கிடைக்கும் இலவசத்தையே எதிர்பார்த்து உழைத்து சம்பாதிக்க சோம்பேறித்தனம் படுவது போலல்லவா இன்றைய போதனைகள் இருக்கிறது.
.

தேவ நீதிக்கு முன் நம் நீதி ஒன்றுக்கும் உதவாததுதான் ஆனாலும் நம்மால் செய்ய முடிந்த அந்த நீதியை இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார். அதுதான் திரும்ப திரும்ப நீதி செய், நியாயம் செய் என்று சொல்கிறார்.

 

மாதம் 20000/-ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தகப்பனுக்கு தனது மகன் சம்பாதித்த 1000 ரூபாய் ஒன்றுமில்லைதான் அதற்காக நீ வேலைக்கே போக வேண்டாம் என்றும் எனது சம்பளத்திலேயே சாப்பிடு என்று எந்த தகப்பனும் சொல்வதில்லை. தன்னை போல தன் பிள்ளையும் வரவேண்டும் என்றுதான் எந்த தகப்பனும் எதிர்பர்ப்பான் அது போலத்தான் இறைவனும். .

.

நியாயத்துக்கும் நீதிக்கும் என்றுமே எதிர்த்து நிக்கும் சாத்தானின் தந்திரத்தால் கட்டுண்டு கிடக்கும் நமக்கு இறைவன் எத்தனை முறை கத்தினாலும் நமது காதில் அது விழுவது இல்லை

.

ஒவ்வொன்றையும் விளக்கமாக எழுதினால் நேரம் போதாது அகவே நீதி நியாயம் இவை இரண்டுக்கும் சில உதாரணங்களை சொல்லி இந்த டாப்பிக்கை முடித்து விடுவோம்.

 

"நியாயம் செய்தல்" என்ற பதத்தின் சரியான அருத்தம் என்னவெனில் "பிறரின் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பங்கம் வராமல் ஒருவன் நடந்துகொள்வது ஆகும். நமது நியாயமான கோரிக்கைகளை பிறருக்காக விட்டுக்கொடுத்தல் மற்றும் சில நேரங்களில் பிறரின் அநியாயமான செயலை கூட தாங்கிக்கொண்டு அதற்கு பதில் செய்யாமல் இருத்தல் எல்லாமே இதில் அடங்கும்.

.

இதற்க்கு சரியான உதாரணம் எதுவென்றால் "பருந்திடம் தப்பி வந்த புறா ஒன்று தனது மடியில் தஞ்சம் அடையவே, பருந்தில் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு புறாவின் எடைக்கு எடை தனது தொடை சதையை அறுத்துக்கொடுத்தானே சிபி சக்கரவர்த்தி" அவனை போல தனக்கு துன்பம் நட்டம் வந்தாலும் பிறர் நியாயத்தை நிலைநாட்டுதல் ஆகும்.

.

இறைவன் எதிர்பார்க்கும் நீதி செய்தல் என்பதற்கு சரியான உதாரணம் "தன் மகன் ஒரு கன்றை தேரை ஏற்றி கொன்றான் என்பதை கேள்விப்பட்டதும் தன் மகனையும் அதே போல் தேரை என்றி கொன்றானே மனுநீதி சோழன்" அது போன்றது. .

.

இப்படி புறஜாதியார் நீதியும் நியாயமும் செய்திருக்க மகா நீதிபரரின் பிள்ளைகளாகிய நாம் அதற்கு ஒருபடி மேலே நீதி நியாயம் செய்ய வேண்டாமா?

.

தன் பிள்ளைய பிறர் பிள்ளையா, தன் ஜாதிய பிறர் ஜாதியா, தன் மதமா பிற மதமா என்றெல்லாம் பார்த்து நியாயத்தை புரட்டாமல் பணம், அழகு, செல்வாக்கு, போன்றவற்றுக்கு மயங்காமல் பயப்படாமல் சரியான நீதி செய்ய வேண்டும். .

.

"பரிசெயார் சதுரேயர் என்பவர்களின் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாக இராவிட்டால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டிர்கள்" என்று இயேசு சொன்னதை நினைவு கூறுங்கள்.

 

எனவே அன்பானவர்களே எசேக்கியேல் 18ம் அதிகாரத்தால் கர்த்தர் கடடளையிடடதுபோல் 
 
இயேசுவின் ரத்த்தத்தால் நீதிமானாக்கப்படட ஒருவன் 
 

 

இரண்டாவதாக 

 

நீதியையும் நியாயத்தையும் செய்ய வேண்டும்! 

 



-- Edited by SUNDAR on Tuesday 10th of March 2020 08:58:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

 
3 மலைகளின் மேல் சாப்பிடாமலும் 
 
மூன்றாவதாக "மலைகளின்மேல் சாப்பிட கூடாது" என்ற கடடளையை ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.  அதாவது  இதற்கான சரியான காரணம் என்னவென்பது புரியவில்லை.  
 
ஆகினும் தொடர்ந்து வரும் 4வது கடடளையானது இவ்வாறு இருக்கிறது 
  
4இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக தன் கண்களை எறேடுக்காமலும்  
 
எனவே எந்தது கணிப்பு படி  "மலை"  என்பது எதோ ஒரு விசேஷமான இடமாக அறியப்படுகிறது,
 
மோசே கர்த்தரின் பின்புறத்தை கண்டதும் ஒரு மலைதான்  கர்த்தராகிய இயேசுவை சிலுவையில் அறைந்தும் ஒரு மலைதான் 
மறுரூபம் அடைந்ததும் ஒரு மலைதான். 
 
ஆண்டவராகிய இயேசு ஜெபம் பண்ணும்படிக்கு பலமுறை மலையில் ஏறியிருக்கிறார். சாத்தான் கூட உலகின் சகல ராஜ்யத்தையும் இயேசுவுக்கு காண்டபிக்க ஒரு மலையில் மேல் தான் இயேசுவை கொண்டு போயிருக்கிறான்.   
 
நம் நாட்டில் எந்த மலையின் உச்சியில் பார்த்தாலும் ஏதாவது ஒரு இந்து  கோவில் இருப்பதை காண முடியும்.
 
எனவே எதோ மறைவான காரணத்தினிமித்தம் ஆண்டவர் "மலையின்மேல் சாப்பிட கூடாது" என்றும்  "விக்கிரகங்களுக்கு நேராக தன கண்களை ஏறெடுக்க கூடாது" என்றும் சொல்லியிருக்கிறார்.  நாம் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு  அதன்படியே செய்வோம் 
 
விக்கிரக ஆராதனை  சம்பந்தப்படட எந்த ஒரு காரியத்திலும் நாம் உடன்பட கூடாது. நாள் பார்த்தல் / ராசி பார்த்தல் / குறி கேட்பது ஜோஸ்யம் பார்த்தல் போன்ற எந்த ஒரு காரியத்தை விட்டும் விலகி இருப்பது அவசியம்.   


-- Edited by SUNDAR on Friday 20th of March 2020 07:18:03 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

தொடர்ந்து மரணமில்லா வாழ்க்கைக்கான செய்தியை எழுதுங்கள். வசன ஆதாரத்துடன் தொடருங்கள்..

__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 


/////////நீங்கள் யாருக்கு முழுமையாக கீழ்படிகிறீர்கள் ?

பழைய ஏற்பாட்டில் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்ட:-

நீரில் வழ்பவைகளில் சிறகும் செதிலும் இல்லாதவைகளை புசிக்ககூடது (லேவி)

ஸ்திரி விலக்காய் இருக்கும் போது ஏழு நாள் அவளுடன் சேரக்கூடாது./////

இந்த இரண்டுக்குமான வேத வசனம் எங்கு அண்ணா உள்ளது ?

/////////////////யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.


* மலைகளின் மேல் சாப்பிடாமலும்

* கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து

* பொலிசை வாங்காமலும் /////////////////

இவை மூன்றினதும் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை அண்ணா மலைகளின் மேல் சாப்பிடாமல் என்றால் என்ன?

அடமானத்தை திரும்ப கொடுத்தல் என்றால் என்ன?

பொலிசை என்றால் என்ன ?

இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை பிறந்திருக்காதா? அப்படியாயின் எப்படி பல்கி பெறுக முடியும் ?

சற்று விளக்கவும்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

காத்தருக்குள் அன்பான சிஸ்ட்டருக்கு அன்பின் வாழ்த்துக்கள்.

 
நான் தேவனிடம் இருந்து அறிந்து எழுதியவைகளை ஏற்றுக்கொண்டு மேலும் அறிய விரும்பும் ஒருசிலபேர்களில் நீங்களும் ஒருவர்.
 
அதற்காக என் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன்.
 
கர்த்தர்தாமே உங்களை தேவ ஞானத்தால் நிரப்பி உண்மைகளை அறியதர   வேண்டுகிறேன்.
 
 
லேவியராகமம் 15:19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்
லேவியராகமம் 18:19 ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே.
 
கிறிஸ்த்துவின் இரத்தத்தால் மீட்க்கப்பட்டுள்ள நம்மை தீட்டு ஒன்றும் செய்ய முடியாது ஆனால் தேவன் ஸ்திரி விலக்காக இருக்கையில்  சேராதே என்று சொல்லியிருப்பதாலும் அதை தீர்க்கதரிசியால் உறுதி செய்திருப்பதால் அதை கைக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
 
 

 

லேவியராகமம் 11:9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
லேவியராகமம் 11:10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

உபாகமம் 14:9 ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
உபாகமம் 14:10 சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

நன்றி அண்ணா

தேவனுக்கு மகிமை உண்டாவதாக

இந்த தளத்தை தேவன் எனக்கு காட்டியதில் இருந்து அநேக ஆவிக்குரிய உண்மைகளை அறியவும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி அடையவும் என்னால் முடிந்தது. இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

மேலும் தேவன் தாமே உங்களை மேலும் பயன்படுத்துவாராக

சிறகும் செதிளும் இல்லாத பிராணிகளுக்கு உதாரணம் சொல்லுங்கள் அண்ணா ஜலத்தில் இருக்கிறவைகளில் சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்க கூடாதா? இல்லாவிட்டால் பொதுவாகவே அப்படியா? சிறகும் செதிளும் இல்லாதது என்றால் எது என்று எனக்கு தெரியாது அதன் உதாரண கேட்டேன்

/////////////////யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.


* மலைகளின் மேல் சாப்பிடாமலும்

* கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து

* பொலிசை வாங்காமலும் /////////////////

இவை மூன்றினதும் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை அண்ணா மலைகளின் மேல் சாப்பிடாமல் என்றால் என்ன?

அடமானத்தை திரும்ப கொடுத்தல் என்றால் என்ன?

பொலிசை என்றால் என்ன ?

இறைவன் விலக்கிய கனியை புசித்த பிறகுதான் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிந்து முதல் குழந்தையே பிறந்தது. எனவே முதல் குழந்தை பிறந்ததே பாவம்தான்.

ஆதாம் ஏவாள் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை பிறந்திருக்காதா? அப்படியாயின் எப்படி பல்கி பெறுக முடியும் ?

சற்று விளக்கவும்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 


////ஆதாம் ஏவாள் பாவம் செய்யாமல் இருந்திருந்தால் குழந்தை பிறந்திருக்காதா? அப்படியாயின் எப்படி பல்கி பெறுக முடியும் ?

சற்று விளக்கவும்//
 
தேவன் ஆதாம் ஏவாளை பார்த்து நீங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று எங்கும் சொல்லவில்லை.
 
பாவம் உலகத்துக்குள் பிரவேசித்து  ஜலப்பிரளயத்துக்கு பிறகு நோவாவை பார்த்தே இவ்வாறு சொன்னார் 
ஆதியாகமம் 9:1 பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.

அதற்க்கு முன்னர் ஆதியாகம் 1ம் அதிகாரத்தில்

ஆதியாகமம் 1:28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
அவர் சொல்வது தேவ புத்திரர்களை பார்த்து.

மனுஷர்கள் சிருஷ்டிப்பில் இருவேறு நிலைகள்!

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

நன்றி அண்ணா

தேவனுக்கு மகிமை உண்டாவதாக

இந்த தளத்தை தேவன் எனக்கு காட்டியதில் இருந்து அநேக ஆவிக்குரிய உண்மைகளை அறியவும் ஆவிக்குரிய வாழ்வில் வளர்ச்சி அடையவும் என்னால் முடிந்தது. இதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.

மேலும் தேவன் தாமே உங்களை மேலும் பயன்படுத்துவாராக

சிறகும் செதிளும் இல்லாத பிராணிகளுக்கு உதாரணம் சொல்லுங்கள் அண்ணா ஜலத்தில் இருக்கிறவைகளில் சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்க கூடாதா? இல்லாவிட்டால் பொதுவாகவே அப்படியா? சிறகும் செதிளும் இல்லாதது என்றால் எது என்று எனக்கு தெரியாது அதன் உதாரண கேட்டேன்

/////////////////யார் அந்த நீதிமான்? கீழ்கண்ட 18 காரியங்களை கைகொண்டு நடபபவனே நீதிமான் அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று (நான் அல்ல) கர்த்தர் சொல்லுகிறார்.


* மலைகளின் மேல் சாப்பிடாமலும்

* கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திரும்ப கொடுத்து

* பொலிசை வாங்காமலும் /////////////////

இவை மூன்றினதும் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை அண்ணா மலைகளின் மேல் சாப்பிடாமல் என்றால் என்ன?

அடமானத்தை திரும்ப கொடுத்தல் என்றால் என்ன?

பொலிசை என்றால் என்ன ?

 


 

கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து

 

 

கடன் வாங்கியவனுக்கு அடமானத்தை திருப்ப கொடுத்து:

இன்றைய உலகில் . பணத்தை கடனாக கொடுக்கும் முன் அதன் மதிப்புக்கு ஏற்றார் போல் பொருளை அடமானமாக வாங்கிக்கொள்வது பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகிறது.

தங்கநகைகள், வீடு, மனை, பாத்திரங்கள், வயல்கள் மற்றும் அனேக பொருட்களின் அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. இப்படி கடன் வாங்கியவர் ஒருவேளை அந்த கடனை திரும்ப தரமுடியாவிட்டால் அடமானம் வைக்கப்பட்ட பொருள் கடன் கொடுத்தவர் எடுத்துகொள்ளவோ, அல்லது விற்று பணம் பண்ணவோ அவருக்கு உரிமை உள்ளது.

ஆனால் ஒருவன் கர்த்தரின் வழியில் சரியாக நடக்க வேண்டுமென்றால் தான் அடமானமாக பெற்ற பொருளை எக்காரணத்தை கொண்டும் வைத்துக்கொள்ளாமல் உரியவனிடம் திருப்பி கொடுத்துவிட வேண்டும். அவன் ஒருவேளை கடனை திருப்பி தராமல் போனாலும் அந்த பொருள் கடன் கொடுத்தவனை சாராது. ஆம் உலக நீதிக்கும் இறைவனின் நீதிக்கும் அனேக வித்தியாசங்கள் உள்ளது

எனவே அடமானமாக பெற்ற பொருள் எதுவும் தன்னிடத்தில் இருந்தால் உடனே அதை திருப்பி கொடுக்க கடவன்

 

பொலிசை வாங்காமலும்:பொலிசை வாங்காமலும்:

 

தானியங்களையும், கால்நடைகளையும் பொலிசைக்கு விடும் பழக்கம் கிராமங்களில் உண்டு. அதாவது ஓருவர் ஆட்டை வாங்கி வளர்த்து அது இரண்டு குட்டி போட்டால் ஒருகுட்டி வளர்த்தவருக்கு என்பது போன்று ஒரு பழக்கம் உண்டு. அதுபோல் தானியாயத்தை வயலில் விதைத்து அதிலும் பங்கு கணக்கு உண்டு அது பற்றி முழு விபரமும் தெரியவில்லை ஆனாலும் அதுபோல் பொலிசை வாங்கக்கூடாது என கர்த்தர் கட்டளை இட்டுள்ளார்



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

மலைகளின் மேல் சாப்பிடாமலும்:

 

 

மலைகளின் மேல் சாப்பிடாமலும்:

மலைகளின் மேல் அமர்ந்து ஆகாரம் உண்ணக்கூடாது என்று இறைவன் கட்டளை இட்டுள்ளார் அதற்கு காரணம் என்னவென்று நமக்கு சரியாக தெரியாவிட்டாலும் எதாவது மறைவான காரியங்கள் இருக்ககூடும்.

பெரும்பாலான கோவில்கள் மலைகளின் மேலேயே கட்டப்பட்டுள்ளதாலும் அனேக சாமிகளின் இருப்பிடம் மலையாக இருப்பதாலும் கர்த்தர் இந்த கட்டளையை சொல்லி இருக்கலாம் என்று கருதுகிறேன்.

எது சரியோ கர்த்தர் சொல்லிவிட்டார் மலைகள் மேல் சாப்பிடக்கூடாது என்று, எனவே மலைகளின் மேல் அமர்ந்து சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும்



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

thanks anna

__________________
«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard